1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2016 (09:08 IST)

நான் ரொம்ப மோசமானவன், என்னை சீண்ட வேண்டாம்: விஜயகாந்த் விளாசல்!

நான் ரொம்ப மோசமானவன், என்னை சீண்ட வேண்டாம்: விஜயகாந்த் விளாசல்!

தமிழக இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். தஞ்சாவூர் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.


 
 
இதில் பேசிய அவர், நான் என் மனதில் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் பேசுவேன். மற்றவர்கள் மாதிரி எழுதி வைத்து பேசமாட்டேன். மேடை நாகரீக என்னிடம் இல்லை என்று சொல்கிறார்கள். காசு கொடுத்தா நான் மேடை நாகரீகத்தை கற்றுக்கொண்டே. நான் ஸ்லோ ரீடர் என்பதால் பேச நினைப்பதை எடிட் பண்ணித்தான் பேசுவேன்.
 
பேசுவதற்கு நிறைய நினைப்பேன் ஆனால் அதை எடிட் செய்துதான் பேசுவேன். மத்திய அரசு செல்லாது என அறிவித்த பணத்தை அதிமுக, திமுக கட்சிகள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணமாக கொடுக்கிறார்கள் நீங்கள் ஏமாற வேண்டாம் என்றார்.
 
மேலும், அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி வருடத்திற்கு 900 கோடி ரூபாய் மணல் குவாரியில் சம்பாதிக்கிறார்கள் என பேசிய விஜயகாந்த் கடைசியாக எங்களை சீண்ட வேண்டாம், நாங்க மோசமானவங்க என கூறி முடித்தார்.