சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்
சிங்கப்பூரில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வாரம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்ப மருத்துவரும் சென்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்ப மருத்துவர் ஆகியோர் நேற்று இரவு, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் சென்னை திரும்பினர்.
விஜயகாந்தின் சென்னை வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால் விமான நிலையத்திற்கு கட்சி தொண்டர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.