1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 18 ஜனவரி 2025 (12:45 IST)

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாகவும், அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு மனு செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து ஏகனாபுரம் கிராம மக்களை விஜய் சந்திக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் பரந்தூரில் உள்ள மக்களை சந்திக்க வரும் விஜய்க்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பரந்தூரில் பொதுமக்களை விஜய் சந்திக்க இரண்டு இடங்களை காவல்துறை ஒதுக்கி உள்ளது. அந்த இரண்டு இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் அவர் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிக கூட்டத்தை கூட்டக்கூடாது என்றும் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வர வேண்டும் என்றும், கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

Edited by Mahendran