1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:42 IST)

சீமான் என்னிடம் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில்..? வீரலட்சுமி ஆவேசம்..!

என்னை பற்றி அவதூறாக பேசிய சீமான் இன்னும் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லை எனில் அவர் மீது வழக்கு தொடுப்பேன் என்றும் வீரலட்சுமி தெரிவித்துள்ளார் 
 
சமீப காலமாக வீரலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக விஜயலட்சுமி விவகாரத்தில் அவர் கூறிய கருத்துக்கள் நாம் தமிழர் கட்சி தொண்டர்களை ஆவேசப்படுத்தியது.
 
இந்த நிலையில் பொது வெளியில் என்னை தமிழர் இல்லாதவர் என தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 
 
இல்லையென்றால் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறேன் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva