1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vairamuthu poem on periyar birthday

பெரியார் பிறந்தநாளில் வைரமுத்து கவிதை!

வைரமுத்து
தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் பெரியாரையும் வாழ்த்தி கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சமூக நீதி என்பது
பேதங்களைப் பேணுவதன்று;
பேதங்கள் நீங்கப்
பாலங்கள் அமைப்பது
சமூக நீதியைக்
கட்டமைத்த பெரியாரும்
அவர் பிறந்த நாளைச்
'சமூக நீதி நாள்' என்று
அடையாளப்படுத்திய
முதல்வர் மு.க.ஸ்டாலினும்
வரலாற்றின் வார்த்தைகளால்
உச்சரிக்கப்படுவார்கள்
அடுத்த கட்டுரையில்
உள்ளாட்சித் தேர்தல் - ஒரே நாளில் மொத்தம் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல்