1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 மே 2023 (13:39 IST)

மதிமுக தொடர்ந்து தனித்தே இயங்கும்: வைகோ அறிவிப்பு..!

மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என கட்சியின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கூறியிருந்த நிலையில் அதற்கு ஏற்கனவே வைகோவின் மகன் துரைவைகோ மறுப்பு தெரிவித்து இருந்தார். 
 
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு விளக்கம் அளித்துள்ளார். மதிமுக கடந்து கடந்த 30 வருடங்களாக தனித்து இயங்குகிறது என்றும் இனியும் தொடர்ந்து தனித்து இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியில் சரியாக செயல்படவில்லை என்றும் அவர் கூறிய எல்லார். 
 
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்றும் தாய் கழகத்தில் மதிமுகவை இணைப்பதுதான் சரியான முடிவு இருக்கும் என்றும் துரைசாமி கூறிய நிலையில் வைகோ இதற்கு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran