1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சிதம்பரம் , வெள்ளி, 10 மே 2024 (13:56 IST)

வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், ரூ 30 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் தீக்கிரையானது!

சிதம்பரம் துரவடித் தெருவை சேர்ந்தவர் கார்த்தி(46).இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கமாக வாகனங்களை துரவடித் தெருவில் உள்ள தனது வீட்டு அருகே நிறுத்தி வைத்திருப்பார்.
 
இந்நிலையில் இன்று காலை எழுந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டெம்போ ட்ராவலர் வாகனம், இரு சக்கர வாகனம், முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிக் கிடந்தன. 
 
மேலும் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களின் முன்புறமும் தீயில் எரிந்து நாசமானது.
 
நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் நாசவேலை காரணமா என்பது தெரியவில்லை.
 
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
 
அப்போது அங்கு மண்ணெண்ணெய் பாட்டில் ஒன்று கிடந்தது. எனவே நள்ளிரவு நேரத்திலோ அல்லது அதிகாலை நேரத்திலோ மர்ம நபர்கள் வாகனங்களின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
வானங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டததாக தெரிய வந்த நிலையில், அதற்கு காரணம் முன் விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் எரிந்து நாசமான வாகனங்களில் மொத்த சேத மதிப்பு சுமார் ரூ 30 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.