1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:31 IST)

தமிழகத்திற்கு வந்த மேலும் இருவருக்கு கொரோனா: ஒமிக்ரானா என பரிசோதனை!

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் திருச்சி வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இருவரும் ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை மதுரை கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது