வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 31 டிசம்பர் 2014 (11:44 IST)

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றிய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
 
ஊதிய ஒப்பந்தம் மற்றும் பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 28ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்திவந்தனர்.
 
இந்த போராட்டம் குறித்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில் தமிழக போககுவரத்துத் துறை அமைச்சருடன் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதனால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும் தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.