1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:19 IST)

ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி: 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..!

ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக சென்னையில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக சென்னை பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் 
சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டலும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 
 
ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
அதேபோல் நெல்லை கிழக்கு துணை காவல் ஆணையராக  ஆதர்ஷ் பச்சேரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran