1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 28 மே 2015 (16:29 IST)

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டிராபிக் ராமசாமி போட்டி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிராபிக் ராமசாமி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
 
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஜூன் 27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக வேட்பாளராக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
திமுகவும், விடுதலை சிறுத்தை கட்சிகளும் போட்டியிடவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டன. பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
 
இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஆவர் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன். திமுக தலைவர் கருணாநிதி, பாஜக தலைவர் தமிழிசை சௌந்த்ரராஜன், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்ப்பேன் என கூறினார். மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்தாலும் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று உறுதியாக கூறினார்.