ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (07:57 IST)

தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கோலாகல கொண்டாட்டம்!

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று தை முதல் நாள் பொங்கல் திருநாளை கொண்டாடினார்கள் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையிலேயே பொதுமக்கள் எழுந்து மாடுகளை குளிப்பாட்டி பொட்டு வைத்து அலங்கரித்து மாடுகளுக்கு பொங்கல் கொடுத்து வருகின்றனர்
 
மாடுகளுக்கு படையலிட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
பொங்கல் திருநாளில் முக்கிய நாளான இன்றைய மாட்டுப் பொங்கல் தினம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.