வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (13:18 IST)

திருவாரூர் தேர்தல் : இன்று மதியம் உயர் நீதிமன்றம் முக்கிய முடிவு

திருவாரூர் தேர்தல் குறித்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பிரசாத் முறையீடு செய்துள்ளார்.
திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று மதியம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகிறது.
 
இன்று காலையில் மற்றொரு நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்திருந்தது. 
 
வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜாபுயல் தாக்குதலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவாரூர் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே  தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென தமிழக அரசு ,உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.