செவ்வாய், 22 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:39 IST)

திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ் சார்ந்தவர் எனக் கூறியிருக்கிறார் அதை நான் பெருமையாக கருதுகிறேன் -மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு...

சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது.....
 
என்னை திருமாவளவன் ஆர்எஸ்எஸ் சார்ந்தவர் எனக் கூறியிருக்கிறார், ஆர்எஸ்எஸ்ஐ சார்ந்தவன் என நான் பெருமையாக கருதுகிறேன். 
 
2009 ஆம் ஆண்டு, இந்த இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
 
இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது அனைத்து கட்சி கூட்டம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அப்போது பாஜக சார்பில் கலந்துகொண்டு நிர்வாகிகள் முக்கிய அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் அருந்ததி மக்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என டேட்டா உடன் கொடுக்கப்பட்டிருந்தது அந்த டேட்டாவை ஆர்டிஐ மூலம் வாங்கிக் நான் கொடுத்திருந்தேன். சட்ட ரீதியாக நாங்கள் தொடர்ந்து அண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக நீதிமன்றத்தில் போராடினோம். திருமாவளவன் சொல்வதைப் போல் எல்லாம் இது எளிதில் கிடைத்துவிடவில்லை என்றார்.