1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 23 பிப்ரவரி 2015 (13:06 IST)

கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்கிறார்கள் - குஷ்பூ

ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.
 
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரும்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை குஷ்பு, ”நிச்சயம் வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் தான்.
 
பாஜகவினர் மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகள் தான் வாங்கினார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.