வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (12:47 IST)

திருமணம் ஆன 2 ஆம் நாளில் கணவன் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் வசித்துவந்தவர் சந்தோஷ் (25). இவரும் பள்ளி ஆசிரியையான மீனாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் இருவீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து மீனா, திருக்கோவிலூரில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 
 
கடந்த 2 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.பின்னர் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பரோடா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 
 
இந்நிலையில் இரண்டாம் நாளில் ( 4 ஆம் தேதி)  மீனா திருவள்ளூர் புட்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்றிருந்தார்.அப்போது வீட்டி தனியாக இருந்த சந்தோஷ் திடீரென தூக்கு மாட்டிக்கொண்டார்.
 
இதனையடுத்து அசோக் நகர் போலீஸார் இந்த தற்கொலை குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். அதில், பெற்றோரை எதிர்த்து மீனாவைக் காதல் திருமணம் செய்ததால் அவருக்கு சொத்தி பங்கில்லை என்றும், இனிமேல் எந்த உறவும் இல்லை என்றுபெற்றோர் எழுதி வாங்கியதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த  சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.