1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2017 (14:30 IST)

கழிவறைக்கு செல்லும் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!

கழிவறைக்கு செல்லும் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!

திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச படத்தை கட்டாயப்படுத்தி காட்டி, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 42 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பர் திருப்பூர் மாவட்டத்தில் குரும்பபாளையத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
 
இவர் தான் வேலை செய்யும் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச படத்தை காட்டி அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளர். இந்த சம்பவத்தை அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூற ஆத்திரமடைந்த அவர்கள் குடும்பத்தினருடன் பள்ளிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு அந்த ஆசிரியரையும் அடித்தனர்.
 
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். காவல்துறையினரும், குழந்தைகள் நலவாரிய அதிகாரிகளும் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கழிவறைக்கு செல்லும் மாணவிகளை மடக்கி பிடித்து அவர்கள் பின்னாடியே சென்று அவர்களுக்கு ஆபாச படங்களை கட்டாயப்படுத்தி காட்டி தவறாக நடந்து வந்துள்ளார். பல்வேறு மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் வழக்கு பதிவி செய்து அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.