1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2022 (12:13 IST)

டெல்டா பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை – மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் தற்போது கடற்கரையோர டெல்டா பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாகப்பட்டிணம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று முதலாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இன்று விடியற்காலை முதலாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதுடன் பல பகுதிகளில் தூரல் மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.