வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By k.N.Vadivel
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2015 (00:46 IST)

சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்றார்.

கடந்த 24 ஆம் தேதி தமிழக சட்ட மன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டம் தொடர்ந்து 29 நாட்கள் நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 29 ஆம் தேதியுடன்  நிறைவடைந்தது. இதனையடுத்து, தமிழக சட்ட மன்ற கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 

 
இந்த நிலையில், சிறுதாவூர் பங்களாவில் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்ல உள்ளார் என்று தகவல் வெளியானது. இதை மெய்பிக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலையில், சிறுதாவூர் சென்றார். அங்கு அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளார்.
 
ஆனால், சிறுதாவூர் பயணம் குறித்து, அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தல் குறித்தும், வெற்றி வியூகம் வகுக்கவும், பலமான கூட்டணி அமைக்கவும், முக்கிய முடிவுகளை அறிவிக்கும் வகையில் அங்கு முக்கிய அதிகாரிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.