1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (13:42 IST)

இன்று 10 மாவட்டங்களில், அடுத்து 4 நாட்களுக்கு... வெதர் எப்படி இருக்கும்??

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தில் மழை பெய்யும் விவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.