தொடர்புடைய செய்திகள்
- நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்: விஷால் டுவீட்
- தந்தை மரணம் தெரியாமல் நீட் எழுதும் மாணவனுக்கு உதவி: தமிழிசை
- மகனை நீட் தேர்வுக்கு அழைத்து சென்ற தந்தை திடீர் மரணம்
- நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்படுத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள்
- தமிழக மாணவர்களுக்கு உதவத் தயார் - கேரள முதல்வர்
மதுரையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராடிய மாணவர்கள் கைது
மதுரையில் நீட் தேர்வில் மாணவர்களுக்கு தமிழுக்கு பதிலாக இந்தியில் வினாத்தாள் வழங்கியதால் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நரிமேட்டில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத சென்றனர். அங்கு அவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. சிலருக்கு மட்டும் தமிழில் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு மதிய உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த குளறுபடி காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அடுத்த கட்டுரையில்
