தொடர்புடைய செய்திகள்
- காவிரி விவகாரம்; தமிழக, மத்திய அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
- பண்ணுறதயெல்லாம் பண்ணிட்டு ஸ்டாலின் ரொம்ப நடிக்கிறாரு - பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்
- நடிகர் சங்க போராட்டத்தில் உடன்பாடு இல்லை: சிம்பு!
- தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் - சத்யராஜ்
- ஜெயலலிதாவைக் கண்டு மத்திய அரசு நடுங்கியது - மு.க.ஸ்டாலின்
காவிரி உரிமை மீட்பு பயணம்: ஸ்டாலின் தலைமையில் 3-வது நாளாக நடைபயணம் தொடங்கியது
தமிழகத்தில் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டங்களின் ஒரு பகுதியாக காவிரி மீட்பு உரிமை நடைபயணத்தை திருச்சியில் உள்ள முக்கொம்பில் கடந்த 7-ந் தேதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று தஞ்சாவூரில் 2 ஆவது நாளாக காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். பட்டுக்கோட்டை, மன்னார்குடி, வாண்டையர் குடியிருப்பு வரை நடைபயணம் மேற்கொண்டார்.
மு.க.ஸ்டாலினின் இந்த சுற்றுப்பயணம் 3-வது நாளாக இன்று காலை தஞ்சை மாவட்டம் அன்னப்பன் பேட்டையில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வருகிற நாளை திருவாரூரிலும், 11-ந்தேதி நாகையிலும் நடைபெறும். பின்னர் 13-ந்தேதி கடலூர் மாவட்டத்தில் காவிரி உரிமை மீட்பு பயணம் நிறைவு பெறுகிறது.
அடுத்த கட்டுரையில்
