1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (13:53 IST)

ஸ்டாலின் ஜனாதிபதியாகக்கூட ஆகலாம் ! - துரைமுருகன் பெருமிதம்

நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ல் துவங்கி  வரும் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  நம் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் முனைப்பாக உள்ளார். எனவே 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அடுத்து வரப்போகும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஜெயித்து  ஆட்சியைப் பிடிக்க கணக்குப் போட்டு வருகிறார். அவருடைய பிரசாரத்திலும் இது நன்றாகவே தெரிந்தது. தனது பிரசாரத்தின் போதும் இதை தெரிவித்துவருகிறார். 
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் பேசியதாவது:திமுக தலைவர்  ஸ்டாலினுக்கு இணையான தலைவர் தமிழகத்தில் இல்லை.மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக்கூட வாய்ப்பு உள்ளவர் என்று தெரிவித்தார்.