இன்று தொடங்கியது இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு
இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள சென்னையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று தொடங்கியுள்ளது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இதுவரை 5,075 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 4,913 பேர் தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கலந்தாய்வு வரும் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.