வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (15:32 IST)

ஒட்டுத்துணிகூட இல்லாமல் குத்துப்பாட்டுக்கு ஆடிய நடன அழகிகள்

ஒட்டுத்துணிகூட இல்லாமல் குத்துப்பாட்டுக்கு ஆடிய நடன அழகிகள்

சேலம் அருகே, ஒட்டுத்துணிகூட இல்லாமல் குத்துப்பாட்டுக்கு நடன அழகிகள் போட்ட  ஆட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 
சேலம் அருகே, செம்மாண்டப்பட்டி அருகே உள்ளது ஏனாதி காலனி. அங்கு ஒரு சமீபத்தில் ஒருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 
 
நடன நிகழ்ச்சி சுமார் இரவு 10 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம் பெண்கள் குத்தாட்டம் போட்டனர். நேரமாக நேரமாக அவர்கள் மிகவும் ஆபாசமாக ஆடியதாக கூறப்படுகிறது.
 
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, ஆபாச நடனத்தை அங்குள்ள அனைவரும் ரசித்து பார்த்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
போலீசாரை கண்டவுடன் வேடிக்கை பார்த்த பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர். ஆபாச நடனம் ஆடிய இந்த இளம் பெண்களும் தங்களது துணிகளைக் கூட எடுக்காமல் ஓட்டம் பிடித்தனர்.
 
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆபாச நடனத்திற்கு பயன்படுத்திய மைக்செட்டை பறிமுதல் செய்தனர். 
 
ஓமலூர் பகுதியில் ஆபாச நடனம் நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.