தொடர்புடைய செய்திகள்
- செய்திகளில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது: 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்..!
- புதிய வகை கொரோனாவால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் மா சுப்பிரமணியன்..!
- ''முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் அமைச்சருக்கு நன்றி'' - நடிகர் கார்த்தி அறிக்கை
- ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது'- மத்திய அமைச்சர் தகவல்
- தமிழகத்தில் ஒமிக்ரான் XBB,BA2 வகை வைரஸ்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!
டாஸ்மாக் விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி
டாஸ்மாக் விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும் அதனால் தான் டாஸ்மாக் வருவாய் உயர்ந்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். தமிழகத்தில் மது நுகர்வோரின் எண்ணிக்கை உயர்ந்ததால் வருவாய் அதிகரிக்கவில்லை என்றும் விலை உயர்வின் காரணமாக தான் வருவாய் அதிகரிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசுக்கு டாஸ்மாக் மூலமாக அதிக வருவாய் கிடைப்பதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
