1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (14:24 IST)

பிரதமர் மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை, அண்ணாமலைக்கு தெரியவில்லை: செல்லூர் ராஜூ

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரிந்துள்ளது என்றும் ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவரது அருமை தெரியவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதும் இரு தரப்பும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றனட் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர் அவ்வளவுதான், ஆனால் எங்களுக்கு பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, நட்டாஜி ஆகியோர்கள் தான் முக்கியம் 
 
எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அழைத்து பிரதமர் மோடி அருகில் அமர வைத்தார். அவருக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமி அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 
Edited by Mahendran