வைகோவுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் திடீர் ஆதரவு

வியாழன், 27 ஏப்ரல் 2017 (07:45 IST)
விடுதலைப்புலிகளின் இயக்கத்தை ஆதரவு அளித்து கொண்டிருந்தாலும் வைகோவை ஆதரித்து இதுவரை நாம் தமிழர் கட்சி சீமான் பேசியதே இல்லை. இந்நிலையில் திடீரென தற்போது வைகோவுக்கு ஆதரவாக சீமான் குரல் எழுப்பியுள்ளார்.



 


கடந்த 2009ல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கை விரைந்து முடிக்க கோரி வைகோ கடந்த 20 நாட்களாக சிறையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  'தமிழகத்தின் வாழ்வாதாரத்தினையும், நிலவளத்தினையும் நிர்மூலமாக்கும் திட்டங்கள் தமிழர் மண்ணில் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக, அனுபவங்கள் பல பெற்ற வைகோ இத்தகைய சூழலில் சிறைப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும். அவர் விரைவில் சிறைமீண்டு தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் தருணத்தை எதிர்நோக்குகிறோம். எனவே, வைகோ  மீது தொடரப்பட்ட இப்போலியான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். வைகோ விடுதலைபெற்று தனது அரசியல், சமூகப் பங்களிப்பை செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்'

எல்லாம் காட்டு

அமெரிக்காவின் எப்-1 மற்றும் ஜே-1 விசாவில் புதிய மாற்றம்.. இந்திய மாணவர்களுக்கு சிக்கலா?

மீண்டும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்.. டெல்லி நோக்கி செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தம்..

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்!.. பாடகர் தெருக்குரல் அறிவு கைது!..

2 மாதங்களில் திருமணம்!.. ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமி!..

சரக்கு பாட்டில் வாங்குவதில் புதிய நடைமுறை!.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி முடிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments