1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (19:51 IST)

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மெரினா நினைவுடங்கள் அனைத்தும் அகற்றப்படும்: சீமான்

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மெரினாவில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் அகற்றி விடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
ஒட்டன்சத்திரத்தில் நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். அப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மெரினாவில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் அகற்றி விடுவோம் என்று தெரிவித்தார். 
 
தற்போது பேனா நினைவிடம் வைப்பதை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதையும் மீறி வைத்தால் எங்களிடம் அதிகாரம் வரும்போது அவற்றை அகற்றுவோம் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஸி கிரைண்டர் கொடுக்க மாட்டோம் நல்ல குடிநீர் காற்று தரமான மருத்துவம் கிடைத்த செய்வோம் என்று தெரிவித்தார்
 
Edited by Mahendran