1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (07:34 IST)

நான் முதல்வரானால் மீனவர்கள் கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன்: சீமான்

நான் முதலமைச்சரானால் மீனவர்கள் கையில் வெடிகுண்டு கொடுத்து மீன் பிடிக்க அனுப்பி வைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதை ஆகி வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இது குறித்து கூறிய போது நான் முதல்வரானால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக மீனவர்கள் கையில் வெடிகுண்டு ஆயுதம் கொடுத்து அனுப்புவேன் என்று தெரிவித்தார்.
 
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மோடி போட்டியிடுவதாக வெளியான தகவலால் நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தை அங்கு நடத்தி இருக்கின்றோம் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
Edited by Siva