வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (18:43 IST)

நாகநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சசிகலா

சமீபத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறைத்தண்டனை முடிந்து விடுதலை ஆனார். அவருக்கு அமமுக சார்பில் விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரது வருகை தமிழகத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில், பல்வேறு பிரபலங்கள் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அவரைச் சந்தித்துப்பேசி ஆசிபெற்றனர்.

இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா தெரிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அவரது உறவினரான தினகரன் தலைமையிலான அமமுக வரும் தேர்தலில் தேமுதிக,ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் இன்று சசிகலா நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோயில் சுவாமி தரிசனம் செய்தார்.