1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (12:47 IST)

மனைவி கர்ப்பமான 2 மாதத்தில் கொழுந்தியாவும் கர்ப்பம்.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!

மனைவி கர்ப்பமான இரண்டு மாதத்தில் கொழுந்தியாவும் கர்ப்பமானதை அடுத்து சேலத்தைச் சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சேலத்தை சேர்ந்த தனியார் வங்கியில் பணிபுரியும்  27 வயது இளைஞனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.  இந்த நிலையில் அவருடைய கர்ப்பமான நிலையில் கொழுந்தியாவும் கர்ப்பமாகியுள்ளார்.

தனது அக்காவின் கணவர் தானே என  அவரது கொழுந்தியாள் மாமா மாமா என்று பழகிய நிலையில் அவரையும் தன் வழிக்கு கொண்டு வந்ததோடு கர்ப்பம் ஆக்கியதும் தெரியவந்தது.

கொழுந்தியாவுக்கு 16 வயதில் ஆகிய நிலையில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருமணமான ஆறு மாதத்தில் மனைவியை கர்ப்பம் ஆக்கியதோடு தனது காம பார்வையால் கொழுந்தியாவையும் கர்ப்பமாக்கிய சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Mahendran