வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (16:07 IST)

1500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் : தமிழக அரசு அதிரடி

2010 க்குப் பின் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என அரசு அறிவித்திருந்தது. இதனடிப்படையில் 1 - 8 ஆம் வகுப்புவரை பனியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்  1500 பேருக்கு தற்போது சம்பளம் நிறுத்தியுள்ளத்து பள்ளிக்கல்வித்துறை.
 
இதனையடுத்து மார்ச் 2019 வரை அவகாசத்தை நீட்டித்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாததால் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.