1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (15:00 IST)

ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

Ramkumar
சுவாதி வழக்கில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ராம்குமாரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
புழல் சிறையில் மின்சாரவயரை கண்டித்து ராம்குமார் தற்கொலை செய்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்திய பின்னர் தமிழக அரசுக்கு இந்த உத்தரவை மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பதும் அதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மின்கம்பியை குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்ததாக ராம்குமாரின் தந்தை புகார் அளித்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran