தொடர்புடைய செய்திகள்
- பட்டப்பகலில் பெண்ணை தாக்கி நகை கொள்ளை - சிக்கிய வாலிபர்கள் (வீடியோ)
- கரூரில் தொடரும் மணற்கொள்ளை - அதிர்ச்சி வீடியோ
- பஸ் ஸ்டிரைக்கை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் சில ஆட்டோ ஓட்டுனர்கள்
- பெரியபாண்டியனுக்கு அஞ்சலி: அடகு மற்றும் நகைக்கடைகள் இன்று மூடல்
- கொலையாளிகளை பிடிக்க தமிழக போலீசாருக்கு உதவி உறுதி: பாலி கண்காணிப்பாளர் தீபக் பார்கவ்
சென்னை ஐ.ஓ.பி வங்கியில் ரூ.32 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.ஓ.பி வங்கி கிளையில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பங்கியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 24 மற்றும் 25ம் தேதி ஆகிய நாட்களும் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அந்நிலையில், இதனைப் பயன்படுத்தி இந்த வங்கியில் உள்ள 2 லாக்கரை உடைத்து ரூ.32 லட்சம் பணத்தை சிலர் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த 132 பைகளில் உள்ள தங்க நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து வங்கி ஊழியர்கள் மற்றும் காவலாளிகளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக, தினமும் பணிக்கு வரும் ஒரு காவலாளி இன்று வரவில்லை. எனவே, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
