வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 21 ஜூலை 2016 (11:44 IST)

பூங்காக்களில் பள்ளி மாணவர்களை குறிவைக்கும் சீமாட்டிகள் : சென்னையில் அதிர்ச்சி

சிறு குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் உலவும் பூங்காக்களுக்கு 45 வயதுக்கும் மேற்பட்ட பணக்கார பெண்கள்  வருவார்கள்.


 


அங்கு விளையாடும் ஒரு பள்ளி மாணவனை தேர்ந்தெடுப்பார்கள. அவனிடம் நைசாக பேசி நட்பாக பழகுவார்கள். அதன்பின், ஹோட்டலில் சாப்பிடுகிறாயா? எதாவது வேண்டுமா? என்று வலை விரித்து தனது காரில் அழைத்து சென்றுவிடுவார்கள்.
 
அதன்பின் ஒரு 10 நாட்களுக்கு அந்த பெண்கள் பூங்காவின் பக்கம் வருவதில்லை. அதன் பின் அதே பூங்கா.. வேறு ஒரு பள்ளி மாணவன்.. அந்த மாணவர்களை அழைத்து சென்று தங்களின் காம பசிக்கு இரையாக்கும் கொடுமை பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. 
 
ஆசை வார்த்தைக்கும், ஆடம்பரத்திற்கும், பணத்திற்கும் மயங்கும் சிறுவர்களே அவர்களின் இலக்கு. இந்த மோசமான கலாச்சாரம் மெல்ல மெல்ல தற்போது சென்னையிலும் பரவி வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
எனவே, பூங்காக்களின் விளையாடும் பள்ளி மாணவர்களை பெற்றோர்கள்தான் கவனமாக கவனிக்க வேண்டும் என்பது அவசியமாகியுள்ளது.