வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 5 மே 2014 (15:28 IST)

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து குறைந்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
 
குறைந்த தாழ்வு நிலையானது தற்போது கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும். சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
 
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 7 செ.மீ., இரணியலில் 6 செ.மீ. மழையும் பெய்துள்ளது" என்று தெரிவித்தார்.