வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (07:53 IST)

இன்று காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain
தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைத்தளத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Siva