1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (17:00 IST)

என் தந்தையை கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி பேச்சு!

புதுச்சேரில் மக்களிடையே பேசிய ராகுல்காந்தி தனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார்.

தமிழகம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல்காந்தி தமிழகம், புதுச்சேரியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது புதுச்சேரி அரசியலில் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் ராகுல்காந்தி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அங்கு மக்களிடையே பேசிய அவர் “என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனால் அவரை கொன்றவர்கள் மீது எனக்கு எந்த கோவமும், வெறுப்பும் இல்லை. அவர்களை நான் மன்னித்து விட்டேன்” என கூறியுள்ளார்.