1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (17:38 IST)

கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரனோ பாதிப்பில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதும் இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உயிர் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் தற்போது பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது