1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (16:16 IST)

சிறார்களுக்கான தடுப்பூ- மத்திய அரசு அறிவுறுத்தல்

ஏற்கனவே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரொனனாதடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி முதல்  15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்திற்காக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து  கொரோனா தொற்று கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவிய நிலையில்,  தற்போது இரண்டாவது அலை  பரவி வருகிறது. அத்துடன் ஒமிக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. 9 ஆம் வகுப்பு முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் தமிழக அரசு வழிகாட்டு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி முதல்  15 வய்து முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்திற்காக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தடுப்புசி முகாம் நடைபெரும் பள்ளிகளில் ஒரு ஆசிரியரை இயமிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.