வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (10:45 IST)

வைரலாகும் சசிகலா புஷ்பாவின் புகைப்படம் போஸ்டர்கள்

சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இணையதளத்தில் வெளியான சசிகலா புஷ்பாவின் புகைப்படம் கொண்டு அவரை சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.


 


 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சசிகலா புஷ்பா சசிகலா நடராஜன் மீது குற்றம்சாட்டி வருகிறார். ஜெயலலிதா உடல்நிலை குறைவுக்கு காரணம் சசிகலா தான் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியும் அளித்தார். 
 
அதன் விளைவாக சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சசிகலா புஷ்பாவை சித்தரித்து அவரது புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒடியுள்ளனர்.
 
அதில் சசிகலா புஷ்பாவை கொம்பு முளைத்தவராக சித்தரித்து, ‘கழகத்தை பாதுகாக்க எங்களுக்குத் தெரியும் நீ யார்? நாவை அடக்கு இல்லை…’ என்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இன்னொரு போஸ்டரில் ‘பெண் இனத்தின் அவமானச் சின்னம்’ என்று உள்ளது. 
 
இணையதளத்தில் பரவிய சசிகலா புஷ்பாவின் புகைப்படங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் தடையாணை பெற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த புகைப்படங்களைத்தான் அந்த போஸ்டர்களின் பயன்படுத்தியிருக்கிறார்கள்.