வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2015 (06:36 IST)

தமிழக காவல்துறைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பாராட்டு

தமிழக காவல்துறைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தமிழக பிரிவு பாராட்டு  தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழக பிரிவுத் தலைவர் முகம்மது இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறை ஒன்றையே தனது சித்தாந்தமாக கொண்டு அரசியல்  நடத்தி வரும் பா.ஜ.க வின் உண்மை முகம் மீண்டும் ஒருமுறை தோலுரிக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை ஏர்வாடி ஹாஜா முகைதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் பட்டியல் அதனை உறுதி செய்கின்றது. களக்காடு ஒன்றிய பாஜக செயலாளர் மற்றும் பொது செயலாளர் உள்ளிட்ட ஏழு காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
திப்பு சுல்தான் நினைவு தினத்தில் பிரச்சினை, ஆம்பூரில் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல், ஏர்வாடி ஹாஜா முகைதீன் படுகொலை, திருவிதாங்கோடு முஸ்லிம்களின் வாகனங்கள் மீதான தாக்குதல், மதுரையில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு போஸ்டர் பிரச்சாரம் என இவர்களின் வன்முறை பட்டியல் நீள்கின்றது.
 
இப்படிப்பட்ட பயங்கரவாத பின்னணி கொண்ட பாசிச பா.ஜ.க வை மக்கள் அடையாளம் கண்டு வர இருக்கின்ற சட்ட மன்ற தேர்தலில் இவர்களை தனிமைப்படுத்திட வேண்டும். அதே போன்று அரசியல் கட்சிகளும் பா.ஜ.க வுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என உடனே அறிவித்து அவர்களை ஓரங்கட்டிட வேண்டும்.
 
மேலும், இந்த படுகொலைக்கு பின் உள்ள அனைவரையும் காவல்துறை கைது செய்திட வேண்டும். சிறிது தாமதமானாலும், கொலைக் குற்றவாளிகளை கைது செய்துள்ள தமிழக காவல்துறை பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.