1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 மார்ச் 2025 (15:58 IST)

அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..!

Ponmudi
மார்ச் 19ஆம் தேதி அமைச்சர் பொன்முடி, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி மீது செம்மண் வெட்டி எடுத்தது தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
 
இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் வந்த நிலையில், அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தது. இதில், விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ரூ.28 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.
 
இதையடுத்து, மார்ச் 19ஆம் தேதி பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
 
Edited by Mahendran