1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 மார்ச் 2019 (12:46 IST)

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தேடப்படும் குற்றவாளி சரண்

ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி எடுத்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டதாக கோவை மாவட்ட எஸ்பி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக தமிஅழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில் இன்று காலை பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கபட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியதாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன் இன்று சரண்டைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இதுகுறித்து விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு இன்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை எஸ்பி.உள்துறை செயலர் மீது வழக்குபதிவு செய்யக்கோரிய வழக்கில் விசாரணைக்கு  இன்று நீதிமன்றத்தில் அரசு பதில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்நிலையில் இன்று காலை பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கபட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியதாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த தேடப்பட்ட குற்றவாளியான மணிகண்டன் இன்று சரண்டைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.