1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (08:44 IST)

அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு! – சென்னையில் மட்டும் 758 வழக்குகள்!

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேர கட்டுப்பாடு அறிவித்திருந்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணியிலிருந்து 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது தமிழகம் முழுவதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.