1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (17:47 IST)

பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி..! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு..!!

Modi
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பேரணி நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக காவல்துறை அனுமதி கோரப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலாது என கோவை மாநகர காவல்துறை தெரிவித்திருந்தது.
 
பிரதமர் மோடிக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பிற தீவிரவாத அமைப்பால் பாதுகாப்பு அச்சுரத்தில் உள்ளது என்றும் வாகன பேரணிக்கு அனுமதி தந்தால் அவசர மருத்துவ ஊர்தி மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியிருந்தது.

 
இதனிடையே பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.