வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (11:11 IST)

ஒரே மாதத்திற்குள் 15 முறை ஏற்றம்! – புதிய உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை!

மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர தொடங்கிய நிலையில் இன்றைய நிலவரப்படி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் தேர்தல் சமயத்தில் ஒரே விலையில் விற்று வந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

இந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 15 முறை விலை ஏற்றம் அடைந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் 95.51 ரூபாய்க்கும், டீசல் 89.65 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.08 ரூபாயும், டீசல் 3.90 ரூபாயும் அதிகரித்துள்ளது.