வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (20:11 IST)

காய்கறி , மளிகை கடைகள் ஏற்கனவே அறித்த நேரத்தில் திறக்க அனுமதி - தமிழக அரசு

கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. கொரோனா பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

இந்நிலையில், காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், பால் கடைகள் ஏற்கனவே அறிவித்த கால கட்டத்தில் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இறைச்சிக் கடைகளும் நாளை முதல் சென்னையில் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது. மேலும், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி (திங்கட்கிழமை) அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு!