வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (21:24 IST)

1,800 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு சுமார் ரூ. 1 கோடி வர்த்தகம்பாதிப்பு

கரூரில் 1,800 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு சுமார் ரூ. 1 கோடி வர்த்தகம்பாதிப்பு புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிகப்படியான அபராதத் தொகை வசூலிக்கப்படுவதைக் கண்டித்து  இன்று நாடு முழுவதும் லாரிகள் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கரூர் லாரி ஸ்டிரைக்கால் கரூர் மாவட்டத்தில்,  1  கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது அகில இந்திய அளவிலான லாரி ஸ்டிரைக் துவங்கியது.

இது தவிர, எக்ஸ்போர்ட் நிறுவனங்கள், அரிசி மண்டி, வாழை லோடு ஏற்றும் பணியில் ஏராளமான லாரிகள் ஈடுபட்டுள்ளன. ஸ்டிரைக்கில் லாரிகள் கலந்து கொண்டதால், கரூர் மாவட்டத்தில், கொசுவலை,அரிசி மண்டி, வாழை லோடு, எக்ஸ்போர்ட் ஆகிய பணியில் ஈடுபடும் 1,800 லாரிகள் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ளன. ஸ்டிரைக்கால் கரூர் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதத் தொகை விதிக்கப்பட்டுவருகிறது.

இந்தச் சட்டத்தினால் லாரி ஓட்டுநர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தச் சட்டத்தின் கீழ், லாரி ஓட்டுநர்களுக்கு 2.5 லட்சம் வரை அபாரதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இது லாரி ஓட்டுநர்களிடைய பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.இந்த அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தியும், லாரி தொழிலை அரசு பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும்  இன்று ஒரு நாள் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.